2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கூமுனைப் பாதையைத் திறக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2017 ஜூன் 27 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு –பொத்துவில் கடலோரப் பாதை வழியாக கதிர்காமம் முருகன் கோவிலுக்குப் பாதயாத்திரை செல்வதற்காக எதிர்வரும் 15ஆம் திகதி  முதல் ஓகஸ்ட் 2ஆம் திகதிவரை கூமுனை காட்டு வழிப்பாதை பாதை திறந்திருக்கும் என> உகந்தை முருகன் ஆலயத்தின் பிரதம வண்ணக்கர் திஸாநாயக்க சுது நிலமே தெரிவித்தார்.

வடக்கு>  கிழக்கு மாகாணங்களின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கதிர்காமம் முருகன் கோவிலுக்குப் பாதயாத்திரை செல்வோர்>  குறுந்தூர காட்டுப் பாதையைப் பயன்படுத்துவது உண்டு.

உகந்தை முருகன் கோவில் உற்சவம் மற்றும் யாத்திரிகர்களுக்கான ஏற்பாடு தொடர்பாக கடந்த 20ஆம் திகதி அம்பாறை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது>  கூமுனை காட்டுப்பாதையைத் திறப்பதற்கான அனுமதி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதனால் வழங்கப்பட்டது எனவும் அவர் கூறினார்.

மேலும்> உகந்தை முருகன் கோவிலுக்குச்  செல்வோர் வெற்றுப் பொலித்தீன் பைகள்>  பிளாஸ்டிக் போத்தல்கள் போன்றவற்றைக் காடுகளில் வீசுவது தடைசெய்யப்பட்டுள்ளது.

மேலும்  மதுபானத்தைக் கொண்டு செல்லுதல்>  காடுகளுக்குத் தீ வைத்தல்>  மரங்களை வெட்டுதல்>  மிருகங்கள் மற்றும் பறவைகளை வேட்டையாடுதல்>  புதைபொருள் தோண்டுதல் போன்ற சட்டவிரோதச்  செயல்களில் ஈடுபட முடியாது.

இவ்வாறான காரியங்களில் எவராவது ஈடுபட்டால்>  வனபரிபாலனத் திணைக்கள அதிகாரிகளும் பொலிஸாரும் சம்பந்தப்பட்டோர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பார்கள்  எனவும் அவர் கூறினார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .