2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கேரள கஞ்சா வைத்திருந்த பெண் கைது

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 மே 19 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, ஆலையடிவேம்பு  பிரதேசத்தில் 640 மில்லிகிராம் மற்றும் 66 மில்லிகிராம் நிறையுடைய கேரள கஞ்சா இரண்டு பொதிகளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், 37 வயதுடைய பெண்ணொருவர், இன்று (19) கைது செய்யப்பட்டுள்ளார் என்று, அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

ஆலையடிவேம்பு இத்தியடிப் பிரதேச வீடொன்றில் கேரளக் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக,  இரகசியப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே, குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .