2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சாய்ந்தமருதில் சுவரொட்டிகள்

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2017 ஓகஸ்ட் 21 , பி.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றக் கோரிக்கையை வலியுறுத்தி, சாய்ந்தமருதின் பல்வேறு இடங்களில் இன்று திங்கட்கிழமை சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

கல்முனைக்குடியைச் சேர்ந்த சிலர், சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றக் கோரிக்கையைத் தடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனரெனத் தெரிவிக்கப்பட்டுள்ளதையடுத்தே, இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதாக அறிய முடிகிறது.

"எலி வளையானாலும் தனி வளை வேண்டும் எமதூருக்கு", "நம்மை நாமே ஆட்சி செய்வோம்", "மீண்டெழுவோம் மீட்டெடுப்போம்", "நமது தலைவிதியை நாமே தீர்மானிப்போம்", "தனியான உள்ளூராட்சி மன்றம் இல்லையேல், துணிவான மக்கள் போராட்டம் தொடர்ந்து வெடிக்கும்" போன்ற சுலோகங்கள், அந்தச் சுவரொட்டிகளில் பொறிக்கப்பட்டிருந்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .