2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

டெங்கு பரவும் சூழல்; மூவருக்கு வழக்கு

Editorial   / 2020 ஜூன் 25 , பி.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் டெங்கு நுளம்பு பரவக் கூடிய இடங்களை வைத்திருந்த 03 நபர்களுக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்தியதிகாரி திருமதி பரூஸா நக்பர், இன்று (25) தெரிவித்தார்.

விசேட டெங்கொழிப்பு வேலைத் திட்டத்தின் கீழ், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார், டெங்கொழிப்பு செயலணியினர் ஆகியோர் இணைந்து வீடு வீடாகச் சென்று மேற்கொண்ட பரிசோதனையின் போதே, மூவர் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து, இவர்களுக்கெதிராகவே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், தெரிவித்தார்.

இதேவேளை, அக்கரைப்பற்று நகர் 05, 03 பிரிவுகளில் 810 வீடுகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் 22 பேருக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .