Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
எம்.எஸ்.எம். ஹனீபா / 2017 நவம்பர் 22 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, சம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலையொன்றில் தரம் 5ல் கல்வி பயிலும் 10 வயதுக்குட்படட மூன்று மாணவிகளிடம் பாலியல் சேஷ்டை புரிந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அதிபரை, எதிர்வரும் டிசெம்பர் மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் எச்.எம்.எம். பஸீல் உத்தரவிட்டார்.
குறித்த அதிபர், சம்மாந்துறை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் நேற்று (21) ஆஜர்படுத்தப்பட்டார்.
அத்துடன், சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் உதவியுடன், விசேட சட்ட வைத்திய அதிகாரியிடமும் மனநல மருத்துவரிடமும் குறித்த அதிபர் தொடர்பான மருத்துவ அறிக்கையைப் பெறுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
இது தொடர்பாக சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எம். இப்னு அசார் தலைமையிலான பொலிஸ் குழுவினர், மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
47 minute ago
2 hours ago
2 hours ago