2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

புதுத் தம்பதிகளுக்கு விழிப்புணர்வு செயலமர்வு

எஸ்.கார்த்திகேசு   / 2019 செப்டெம்பர் 22 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுகுட்பட்ட 22கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் புதிதாகத் திருமணமான சுமார் 150க்கும் மேற்பட்ட தம்பதிகளுக்கு, ஆரோக்கியமாக பிள்ளை வளர்ப்புத் தொடர்பான செயலமர்வு, நேற்று (21) நடைபெற்றது.

இந்தச் செயலமர்வு, திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி ஜ.எம்.எம்.இஸ்சடீன் தலைமையில், திருக்கோவில் கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.

“வளமான பெற்றோர்களிடமிருந்து, ஆரோக்கியமான எதிர்கால சமுதாயத்தை உருவாக்குவோம்” எனும் தொனிப்பொருளில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தாய், சேய் நல வைத்திய அதிகாரி எம்.ஏ.சீ.பசால், திருக்கோவில் வலயக்கல்விப் பணிமனையில் உளவள ஆலோசகர் திருமதி வி.மணிமேகலை, திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி ஜ.எம்.எம்.இஸ்சடீன் ஆகியோரால் தெளிவூட்டல் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .