2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்கள்; ஐவர் கைது

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2017 டிசெம்பர் 09 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அம்பாறை கரையோரப் பிரதேசங்களில் மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்கள் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர்கள் ஐவர், இன்று (09) கைது செய்யப்பட்டுள்ளனரென, அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

 

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, அக்கரைப்பற்று பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களை விசாரணை செய்த போது, நான்கு மோட்டார் சைக்கிள்களும், பகுதி, பகுதியாக பிரிக்கப்பட்ட ஒரு மோட்டார் சைக்களின் உதிரிப் பாகங்களுடன் தங்க நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் பொத்துவில், அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு போன்ற பிரதேசங்களில் பல்வேறு திருட்டுச் சம்பவங்களிலும், குற்றச் செயல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணை மூலம் தெரியவந்துள்ளதாக, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள மேற்படி சந்தேக நபர்கள் ஐவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .