2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வர்த்தக நிலையங்களில் விசேட சோதனை

Princiya Dixci   / 2021 ஏப்ரல் 05 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கார்த்திகேசு

தேசிய உணவு பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தால், வர்த்தக நிலையங்களில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள பொது சந்தை மற்றும் வர்த்தக நிலையங்கள் என்பன சோதிக்கப்பட்டதுடன், உணவுகள் கையாளுகை தொடர்பான விழிப்புணர்வும் மேற்கொள்ளப்பட்டுகின்றன.

அந்தவகையில், திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பி.மோகனகாந்தனின் ஆலோசனைகளுக்கு அமைவாக, பொது சுகாதார பரிசோதகர்கள் குழு, திருக்கோவில் பிரதேசத்தில் நேற்று (04) விழிப்புணர்வுகள் மற்றும் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

தேசிய உணவு பாதுகாப்பு வாரம், இம்மாதம் 01ஆம் திகதி முதல் எதிர்வரும் 07ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .