2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வேட்பாளர் வீட்டின் மீது தாக்குதல்

Editorial   / 2017 டிசெம்பர் 25 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ் .எல். அப்துல் அஸீஸ், ரீ.கே.றஹ்மத்துல்லா

கல்முனை மாநகரசபை  தேர்தலில், யானைச் சின்னத்தில் சாய்ந்தமருது  பிரதேசத்தில்  ஸ்ரீ லங்கா முஸ்லிம்  காங்கிரஸ் கட்சி  சார்பாக போட்டியிடும்,  எம்.ஐ.எம். பிர்தௌஸின் வீடு, நேற்று (24) மாலை  தாக்கப்பட்டுள்ளது.

இதன்போது, அவரின் வீட்டின் மீது கற்களை வீசியும், வீட்டினுள் சென்று  அங்கிருந்த பொருட்களுக்கு சேதப்படுத்தியும் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் மற்றுமொரு வேட்பாளரான ஏ.சி. எஹ்யாக் கானின்  அரசியல் அலுவலகம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது. 

மேற்படி தாக்குதல் சம்பவம் தொடர்பாக, கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .