2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

முதல்வர் பதவியை இராஜினாமா செய்தார் நாராயணசாமி?

A.K.M. Ramzy   / 2021 பெப்ரவரி 22 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுச்சேரி

புதுச்சேரி முதல்வர் பதவியை இராஜினாமா செய்வதாக, துணைநிலை ஆளுநர் தமிழிசையிடம் நாராயணசாமி கடிதம் அளித்துள்ளார்.

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அடுத்தடுத்து பதவி விலகியதால், அங்கு ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டது. இதனால், எதிர்க்கட்சிகள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தின. இதனையடுத்து, துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) தமிழிசையின் உத்தரவின்படி சட்டப்பேரவையில் இன்று  காலை நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி முன்மொழிந்தார்.

தீர்மானத்தை முன்மொழிந்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக முதல்வர் நாராயணசாமி உரையாற்றினார். அப்போது, அவர் மத்திய அரசு மற்றும் முன்னாள் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியைக் கடுமையாக சாடினார்.

பாஜகவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளதால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற வகையில் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபடுவதாக விமர்சித்தார். முதல்வர் உரை முடிந்தவுடன் அவருடன் திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால், சட்டப்பேரவையில் நம்பிக்கை தீர்மானம் நிறைவேறவில்லை என சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.இதனையடுத்து, புதுச்சேரியில் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துவந்த முதல்வர் நாராயணசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது.

புதுச்சேரி சட்டப்பேரவையில் வெளிநடப்பு செய்த பிறகு, ஆளுநர் மாளிகையில் தமிழிசையை முதல்வர் நாராயணசாமி சந்தித்தார். அங்கு முதல்வர், அமைச்சர்களின் இராஜினாமா கடிதத்தை துணைநிலை ஆளுநரிடம் நாராயணசாமி அளித்தார்.

இந்த சந்திப்புக்குப் பின்னர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், "துணைநிலை ஆளுநரிடம் எங்களுடைய இராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக்கோரி கடிதத்தை கொடுத்துவிட்டு வந்துள்ளோம். இதன்பிறகு முடிவு செய்ய வேண்டியது துணைநிலை ஆளுநர் தான்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .