2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

விபத்தில் விழுந்தவரை கத்தியால் குத்தி வழிப்பறி

Administrator   / 2019 ஒக்டோபர் 15 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோவை கருமத்தம்பட்டி அருகே விபத்தில் சிக்கிய இளைஞரை கத்தியால் குத்தி, 30 இலட்சம் ரூபாய் வழிப்பறி சென்ற சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, அவினாசி பகுதியை சேர்ந்த தமிழரசன், சிவராஜ் கோவையை சேர்ந்த தர்ஷன், ராகுல்குமார் ஆகியோர் இருசக்கர வாகனங்களில் கோரவை சென்றுள்ளனர். 

அவர்களது மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட நிலையில், நால்வரும் கீழே விழுந்துள்ளனர். 

இந்த நேரத்தில், இவர்களை பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள், ராகுல்குமாரின் முதுகில் கத்தியால் குத்திவிட்டு, அவர் வைத்திருந்த 30 இலட்சம் ரூபாயை பறித்துச் சென்றுள்ளனர்.

காயமடைந்த நால்வரையும், அவ்வழியாக வந்த பொதுமக்கள் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராகுல்குமார் கோவை அரசு மருத்துவமனையிலும், மற்ற மூவரும் ஒண்டிப்புதூரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .