2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அகதிகள் படகிலிருந்து 20 பேரைக் காணவில்லை

Editorial   / 2019 ஜூன் 20 , பி.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்தியதரைக் கடலில் தள்ளாடிய அகதிகள் படகொன்றிலிருந்து 27 பேரை பயணிகள் கப்பலொன்று நேற்று  மீட்ட நிலையில், குறித்த படகிலிருந்து காணாமல் போன ஆகக்குறைந்தது 20 பேரை ஸ்பானிய மீட்புச் சேவைகள் தேடி வருகின்றன.

வடகிழக்கு மொராக்கோவிலிருந்து 49 பேருடன் புறப்பட்ட குறித்த படகானது கடந்த செவ்வாய்க்கிழமை காணாமல் போனதாக மீட்புச் சேவைகள் தெரிவித்துள்ளன.

இந்நிலையிலேயே நேற்று முன்தினம் பிற்பகலில் குறித்த படகைக் கண்டுபிடித்த பயணிகள் கப்பலொன்று 27 பேரை மீட்ட நிலையில் ஆறு பேர் ஹெலிகொப்டரால் மீட்கப்பட்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .