2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இந்தோனேஷியா மேற்கு ஜாவாவில் நிலச்சரிவுகளில் 11 பேர் பலி

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 10 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மேற்கு இந்தோனேஷியாவில் கடும் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் 11 பேர் கொல்லப்பட்டதுடன், 18 பேர் காயமடைந்ததாக அந்நாட்டின் இடர் முகாமைத்துவத்துக்கான தேசிய அதிகாரசபை இன்று தெரிவித்துள்ளது.

மேற்கு ஜாவாவிலுள்ள, இந்தோனேஷியத் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து 150 கிலோ மீற்றர் தென்கிழக்காகவுள்ள சிஹன்ஜுவாங்க் கிராமத்தில் நேற்று இலங்கை நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கும், ஆறு மணிக்கும் நிலச்சரிவுகள் ஏற்பட்டதாக குறித்த அதிகாரசபையின் பேச்சாளர் றாடிட்யா ஜடி அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

கடும் மழைவீழ்ச்சி, நிலையில்லான மண் நிலைமைகளால் முதலாவது நிலச்சரிவு ஏற்பட்டதாகவும், பாதிக்கப்பட்டவர்களை வெளியேற்றும்போது இரண்டாவது நிலச்சரிவு ஏற்பட்டதாக றாடிட்யா ஜடி மேலும் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .