2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கடத்தப்பட்ட சிறுமி தாயுடன் கண்டுபிடிப்பு

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 18 , பி.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிழக்கு பிரான்ஸில் கடந்த செவ்வாய்க்கிழமை கடத்தப்பட்ட எட்டு வயதுச் சிறுமி, சுவிற்ஸர்லாந்தில் அவரது தாயாருடன் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செய்ன்டே-குறொய்க்ஸ் எல்லைக் கிராமத்திலுள்ள கைவிடப்பட்ட தொழிற்சாலையொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் சிறுமி நல்ல உடல்நிலையில் இருந்ததாக பிரெஞ்சு அரச வழக்குத் தொடருநர் பொஸ்வா பெரைன் கூறியுள்ளார்.

இந்நிலையில், சிறுமியின் தயார் சுவிஸ் பொலிஸாரின் காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.

சிறுமியின் தாயாரின் தாயின் வீட்டிலிருந்து தான் இப்போது உரிமையில்லாத சிறுமியைக் கடத்த அவரின் தாயாரே உத்தரவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வொஸ்கெஸ் பகுதியிலுள்ள பெளலியரெஸில் மூவரால் கடத்தப்பட்ட சிறுமி, 20 நிமிடங்களுக்குப் பின்னர் அவரின் தாயாரிடம் கையளிக்கப்பட்டதுடன், எந்தவொரு வன்முறையும் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில், தனது தாயின் தாயாருடன் மீண்டும் சிறுமி இணைந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .