2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கடலில் தவிக்கின்ற றோகிஞ்சாக்களை மீட்கக் கோரியுள்ள அகதி முகவரகம்

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 22 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அந்தமான் கடலில் உணவு அல்லது நீரில்லாமல் தங்களது படகில் தள்ளாடும் றோகிஞ்சா அகதிகள் குழுவொன்றை உடனடியாக மீட்குமாறு ஐக்கிய நாடுகள் அகதி முகவரகம் நேற்று தெரிவித்துள்ளது.

இவர்களில் பலர் நோய்வாய்ப்பட்டுள்ளதுடன், மோசமான நீரிழப்பால் பாதிக்கப்படுகின்றனர்.

படகு எங்கிருக்கின்றது என சரியாக தமக்குத் தெரியாது எனத் தெரிவித்துள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர், சில பயணிகள் இறந்ததாக அறிந்ததாகக் கூறியுள்ளார்.

இதேவேளை, தென் பங்களாதேஷிலிருந்து 10 நாள்களுக்கு முன்னர் படகு புறப்பட்டதாகவும், இயந்திரக் கோளாறைச் சந்தித்ததாக உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறைந்தது எட்டுப் பேர் படகில் உயிரிழந்ததாக அரகன் திட்டத்தின் பணிப்பாளர் கிறிஸ் லெவா தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .