2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கலிபோர்னியாவில் உயிரிழந்தோர் எண். 25ஆக உயர்வு

Editorial   / 2018 நவம்பர் 12 , மு.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 25ஆக உயர்ந்துள்ளது என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மாநிலத்தின் வடக்குப் பகுதியில், 14 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 23ஆக உயர்வடைந்தது. மேலும் இருவர், தெற்குப் பகுதியில் உயிரிழந்தனர்.

இத்தீ காரணமாக, சுமார் 250,000 பேர் இடம்பெயர வேண்டியேற்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .