2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவரானார் சோனியா

Editorial   / 2019 ஓகஸ்ட் 12 , பி.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தியை, அக்கட்சி செயற்குழு, இன்று (11) தேர்வு செய்துள்ளது.

லோக்சபா தேர்தலில் அடைந்த தோல்வியைத் தொடர்ந்து, தார்மீக பொறுப்பேற்று, காங்கிரஸ், கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக, ராகுல் காந்தி அறிவித்திருந்த நிலையிலேயே, தற்போது, அவரது தாயார் இந்தப் பொறுப்பை மீண்டும் ஏற்றுள்ளார்.

முன்னணி தலைவர்கள் பலர் வற்புறுத்தியும் கூட, ராகுல் காந்தி தனது இராஜினாமா முடிவில் பிடிவாதமாக இருந்த நிலையில், காங்கிரஸ் கட்சி, தலைமை இன்றி தத்தளித்து வந்தது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக அக் கட்சியின் உயர்மட்டக் குழுவான செயற்குழு டெல்லியில், நேற்று (10) கூடியது. கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும், செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதன் பிறகு, புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறை ஆரம்பித்ததும், இந்த நடைமுறையில் பங்கேற்பதில்லை என்று கூறி, இவ்விருவரும் செயற்குழுக்கூட்டத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.

அதை நேரம், பிரியங்கா காந்தி மட்டும், தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, வடகிழக்கு என காங்கிரஸ் கட்சியின் ஐந்து மண்டல நிர்வாகிகளும் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

அனைத்து மண்டல நிர்வாகிகளுமே, ராகுல் காந்தியே மீண்டும் கட்சித் தலைவர் பதவிக்கு வரவேண்டும் என்று வற்புறுத்தியதாகத் தகவல்கள் வெளியாகின.

ராகுல் காந்திக்கு இதில் சம்மதம் இல்லாத நிலையில் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு இழுபறி நிலை நீடித்தது. இதனிடையே இரவு 10.50 மணியளவில் செயற்குழு கூட்டம் நிறைவடைந்தது.

இதன்போது, “சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்” என்று, கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.

சோனியா காந்தி 1998ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டுவரை, காங்கிரஸ் தலைவராக தொடர்ந்து 19 வருடங்கள் பதவி வகித்தார். அந்த க்கட்சியில் நீண்ட கால தலைவராக பதவி வகித்த பெருமை அவருக்கு உண்டு.

காங்கிரஸ் பெரும் வீழ்ச்சியை சந்தித்த கால கட்டத்தில் தலைமை பதவிக்கு வந்த சோனியா காந்தி, அக்கட்சியை அடுத்தடுத்து ஆட்சி பீடத்தில் அமர வைத்ததில் முக்கிய பங்கு வகித்தார். இப்போது மீண்டும் காங்கிரஸ் கடும் சிக்கலில் தவித்துள்ள நிலையில், தீவிர அரசியலில் இருந்து உடல்நலக்குறைவால் ஒதுங்கியிருந்த சோனியா மீண்டும் களம் வந்துள்ளார். இனி அரசியலில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .