2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கூட்டாக இராஜினாமா செய்த குவைத் அரசாங்கம்

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 13 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

குவைத் பிரதமர் ஷெய்க் சபாஹ் அல்-காலிட் அல்-சபாஹ்வுக்கு, தங்களது இராஜினாமாக்களை அந்நாட்டு அமைச்சர்கள் நேற்று கையளித்துள்ளதாக, அந்நாட்டு அரசாங்க தொடர்பாடல்கள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அமைச்சரவை அமைப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக பிரதமர் ஷெய்க் சபாஹ்வை கேள்விக்குட்படுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரேரணையொன்றை சமர்ப்பித்த சில நாள்களிலேயே இவ்வாறு அமைச்சர்கள் அவர்களது இராஜினாமாக்களை கையளித்துள்ளனர்.

குறித்த அமைச்சரவையானது கடந்த மாதம் 14ஆம் திகதியே அமைக்கப்பட்டிருந்தது.

அரசாங்கத்துக்கும், நாடாளுமன்றத்துக்குமிடையிலான உறவிலானலேயே அரசாங்கம் தனது இராஜினாமாவைச் சமர்ப்பித்துள்ளதாக அரசாங்க தொடர்பாடல் அலுவலகம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .