2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சாட்டில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது படைகள் பிரயோகம்

Shanmugan Murugavel   / 2021 மே 01 , பி.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சாட்டில் கடந்த மாதம் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியமைக்கெதிராக தென் மன்டெளல் பிராந்தியத்தில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட சனத்திரளுக்கெதிராக பாதுகாப்புப் படைகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நிலையில், குறைந்தது நால்வர் சுடப்பட்டு காயமடைந்ததாக, சம்பவத்தைக் கண்ணுற்றோரும், வைத்தியசாலைத் தகவல் மூலங்களும் தெரிவித்துள்ளன.

தலைநகர் இஞ்சமெனவிலிருந்து ஏறத்தாழ 550 கிலோ மீற்றரளவிலுள்ள சர்ஹ் நகரத்திலேயே ஆர்ப்பாட்டக்காரர்கள் சாடிகளையும், பாத்திரங்களையும் உடைத்த நிலையில், சனத்திரளின் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.

வயிற்றுக்கு கீழே சுடப்பட்ட ஒருவர் ஆபத்தான நிலையிலிருப்பதாக மருத்துவப் பணியாளரொருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த ஆர்ப்பாட்டத்துக்கு சமாந்தரமாக அயல் நகரமான கெளம்ராவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 12 பேர் கைது செய்யப்பட்டதாக சிவில் சமூகத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .