Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை
Editorial / 2018 பெப்ரவரி 02 , மு.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜப்பானின் வடக்குப் பகுதியிலுள்ள முதியோர் இல்லத்தில் திடீரெனப் பரவிய தீ காரணமாக, 11 பேர் பலியாகினர். நிதி நீதியாக வறுமையானவர்களுக்கான இல்லத்திலேயே, இத்தீ பரவியுள்ளது.
3 மாடிகளைக் கொண்ட இக்கட்டடத்தில், பனி படர்ந்த வானிலைக்கு மத்தியிலும், தீ பரவியிருப்பதையும், அதை அணைப்பதற்குத் தீயணைப்புப் படை வீரர்கள் முயல்வதையும், தொலைக்காட்சிக் காட்சிகள் வெளிப்படுத்தின.
உள்ளூர் நிறுவனமொன்றால் நடத்தப்பட்டு வந்த இவ்வில்லத்தில், 16 பேர் காணப்பட்டனர் எனவும், அவர்களுள் 8 ஆண்கள், 3 பெண்கள் என 11 பேரே பலியாகினர் எனவும், அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஏனைய 5 பேரும், சிறு காயங்களுடன் உயிர்தப்பினர்.
இலங்கை நேரப்படி நேற்று முன்தினம் மாலை 5.20 மணியளவில் இந்தத் தீ ஏற்பட்டதோடு, இதை அணைப்பதற்கு நேரமெடுத்தது எனத் தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
1 hours ago
2 hours ago
8 hours ago