2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தமிழகம் விழித்தெழட்டும்...

Editorial   / 2018 பெப்ரவரி 22 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் கமல் ஹாசன் நேற்று புதன்கிழமை வெற்றிகரமாக தனது அரசியல் பயணத்தை, மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து ஆரம்பித்தார்.

மதுரையில் மக்கள் பொது பேரணி சூழ, இரவு தனது  கட்சி பெயரான 'மக்கள் நீதி மய்யம்'' மற்றும் கட்சி கொடியினையும் வெளிகாட்டினார்.

அரசியல் பயணத்தின் முதல் நிகழ்வாக மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின், மூத்த சகோதரரையும் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களையும் சந்தித்து உரையாற்றினார். மேலும் 'பிரம்மிப்பூட்டும் எளிமையை கண்டேன், கலாமின் இல்லத்திலும் இல்லத்தாரிடமும் அவர் பயணம் துவங்கிய இடத்திலேயே நானும் என் பயணத்தைத் தொடங்கியதை பெரும் பேறாக நினைக்கிறேன்'' என்றும் 'நாம் கனவு காண்கிறோம். ஒரு புதிய கட்சி, ஒரு புதிய பாதை, ஒரு புதிய கொள்கை. 'மக்கள் நீதி மய்யம்' தமிழகம் விழித்தெழட்டும்'' என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .