2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தீ விபத்தில் ஐவர் பலி; எண்மர் காயம்

Editorial   / 2017 டிசெம்பர் 14 , மு.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனத் தலைநகர் பெய்ஜிங்கின் தெற்குப் பகுதியில் நேற்று (13) ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, 5 பேர் கொல்லப்பட்டதோடு, மேலும் 8 பேர் காயமடைந்தனர்.

நகரத்தில் வெளிநாட்டுத் தொழிலாளிகள் காணப்பட்ட பகுதியில் ஏற்பட்ட தீ காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மத்தியில், தற்போது புதிய தீ ஏற்பட்டுள்ளமை, பெய்ஜிங்கின் பாதுகாப்பு மட்டம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

பைகியாங்ஸி என்ற கிராமத்திலேயே இத்தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது, வெளிநாட்டுத் தொழிலாளிகள் வசிக்கும் பகுதியாகும்.

மின்சார வண்டிகள் இரண்டில் ஏற்பட்ட தீ காரணமாக, இவ்விபத்து ஏற்பட்டதாகத் தெரிவித்த அதிகாரிகள், காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிட்டனர்.

குறித்த வீட்டை வாடகைக்கு வழங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஏராளமான மின்சார வண்டிகள், சார்ஜ் செய்யப்பட்டுக் கொண்டிருந்தன எனவும், அப்போதே தீ ஏற்பட்டது எனவும், சம்பவத்தின் போது அவ்வீட்டில் இருந்தாரெனக் கூறப்படும் நபரொருவர் குறிப்பிட்டுள்ளார். வண்டிகளிலிருந்து எழுந்த நச்சுப் புகை காரணமாகவும் மரணங்கள் ஏற்பட்டிருக்கலாம் என, அவர் மேலும் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .