Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
Editorial / 2017 டிசெம்பர் 18 , மு.ப. 01:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிலியின் தெற்குப் பகுதியிலுள்ள சிறிய கிராமமொன்றில், நேற்று முன்தினம் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டதோடு, 15 பேரைக் காணவில்லை என, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இரவு முழுவதும் பெய்த கடும் மழை காரணமாகவே, மண்சரிவு ஏற்பட்டது என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
வில்லா சான்டா லூசியா என்ற கிராமப் பகுதி, முழுவதமாக மண்ணால் மூடப்பட்ட நிலையில் காணப்பட்டதை, ஹெலிகொப்டர் மூலமாக எடுக்கப்பட்ட படங்கள் வெளிக்காட்டின.
உயிரிழந்தவர்களில் சிலியைச் சேர்ந்த நால்வரும், வெளிநாடொன்றைச் சேர்ந்த ஒருவருமே உள்ளடங்குகின்றனர் என அறிவிக்கப்படுகிறது. குறித்த சுற்றுலாப் பயணி, எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது, இதுவரை உறுதிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.
காணாமல் போன 15 பேரைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காணாமல் போன பகுதியை, அனர்த்த வலயமாக, ஜனாதிபதி மிச்செல் பச்செலெட் பிரகடனப்படுத்தியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago