2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வட, தென் கொரியாக்களுக்கு இடையில் மீண்டும் பேச்சுவார்த்தை

Editorial   / 2018 ஜனவரி 16 , மு.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள், நேற்று (15) மீண்டும் இடம்பெற்றன. இரு நாடுகளுக்கும் இடையில், ஏற்கெனவே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்த நிலையிலேயே, தற்போது புதிய பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

தென்கொரியாவில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு, முன்னைய பேச்சுவார்த்தைகளின் விளைவாக, வடகொரியா சம்மதித்திருந்தது. இம்முறை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள், அவ்வொலிம்பிக் போட்டிகளில், வடகொரிய கலைக் குழுக்களின் பங்குபற்றுகை தொடர்பாகவே இடம்பெற்றுள்ளது.

முன்னைய இணக்கப்பாட்டின் போது, வீரர்கள், உயர்நிலை அதிகாரிகள், இரசிகர்கள் உள்ளிட்டோரை அனுப்புவதற்கு வடகொரியா சம்மதித்த போது, கலைக் குழுக்களையும் அனுப்பச் சம்மதித்தது. ஆனால், அவர்களின் விவரங்கள், எவ்வாறான ஏற்பாடுகள் தேவை என்பது தொடர்பாகவே, நேற்றைய பேச்சுவார்த்தைகள் அமைந்தன.

எல்லைக் கிராமமான பன்முன்ஜொம்மில் இடம்பெற்ற இப்பேச்சுவார்த்தைகள், இலங்கை நேரப்படி நேற்றுக் காலை 6.30 மணியளவில் ஆரம்பித்தன.  இரு தரப்புகளிலும், தலா 4 பேர் பங்குகொண்டனர்.

2012ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட வடகொரிய அரச கலைக் குழுவில் 10 பேர் காணப்படுகின்றனர். இவர்கள், வடகொரியத் தலைவரால் நேரடியாகத் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்பதோடு, அரசாங்கத்தைப் புகழுவதை வழக்கமாகக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .