2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வெளிநாடு செல்ல தரூருக்கு அனுமதி

Editorial   / 2018 ஓகஸ்ட் 03 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது மனைவி சுனந்தா புஷ்கரின் சந்தேகத்துக்குரிய மரணம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள காங்கிரஸ் சிரேஷ்ட தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஷஷி தரூர், வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

தரூர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளுக்குச் சென்றுவர அனுமதி அளிக்கும்படி, டெல்லி நீதிமன்றத்தில், தரூர் மனுத் தாக்கல் செய்ததைத் தொடர்ந்தே, இவ்வனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் அவர், முழுமையாக ஒத்துழைப்பு வழங்கி வருவதால், இவ்வனுமதியை வழங்குவதாகவும், ஒவ்வொரு தடவையும் வெளிநாட்டுக்குச் செல்ல முன்பு, இரண்டு இலட்சம் இந்திய ரூபாய்களை முற்பணமாகச் செலுத்த வேண்டுமெனவும், நாடு திரும்பியதும் அப்பணத்தைப் பெற முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .