2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இறுதிப் போட்டியில் சென். ஜோசப்

Editorial   / 2017 ஜூன் 18 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலைகளுக்கு இடையிலான விலகல் முறையிலான றக்பி தொடரான, மைலோ ஜனாதிபதிக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்குள், சென்.ஜோசப் கல்லூரி நுழைந்துள்ளது.   
கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில், நேற்று (17) இடம்பெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில், கண்டி தர்மராஜ கல்லூரியை வென்றே, சென். ஜோசப் கல்லூரி, இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.   

குறித்த அரையிறுதிப் போட்டியில், 16-5 என்ற புள்ளிகள் கணக்கில், முதற்பாதி முடிவில் முன்னிலை வகித்த சென். ஜோசப் கல்லூரி, இறுதியில், 34-12ன் என்ற புள்ளிகள் கணக்கில் வென்றது.  

சென்.ஜோசப் கல்லூரி சார்பாக, சஷித் சில்வா, சத்துர செனவிரத்ன, வினுல் பெர்ணான்டோ ஆகியோர் தலா ஒவ்வொரு ட்ரைகளைப் பெற்றனர். சஷித் சில்வா, கொன்வேர்ஷன் இரண்டு மூலமும், பெனால்டிகள் ஐந்தின் மூலமும் புள்ளிகளைப் பெற்றார்.   

தர்மராஜ கல்லூரி சார்பாக, ஈ.சி ஏக்கநாயக்க, பவந்த உடன்கமுவ ஆகியோர் தலா ஒவ்வொரு ட்ரையைப் பெற்றனர். சி.தேஷப்பிரிய, ஒரு கொன்வேர்ஷன் மூலம் புள்ளிகளைப் பெற்றிருந்தார்.   

இந்தத் தொடர், பாடசாலைகள் றக்பி தொடருக்கு, மைலோ நிறுவனம், 25ஆவது ஆண்டாகவும் அனுசரணை வழங்கும் தொடராக அமைந்துள்ளது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .