2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கபடி வீரர்களுக்கு கெளரவிப்பு

Editorial   / 2017 மே 22 , பி.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சிவாணி ஸ்ரீ

கபடியில், தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் வெற்றிபெற்ற இலங்கையில் உள்ள கபடி விளையாட்டு வீரர்களைக் கெரவிக்கும் நிகழ்வு, கேகாலை உல்லாச விடுதியில்,நேற்று முன்தினம் (21)  இடம்பெற்றது.  

கேகாலை மாவட்ட கபடி சங்கத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேற்படி நிகழ்வில், 90 கபடி வீரர்கள் கௌரவிக்கப்பட்டனர்  

மேற்படி நிகழ்வில், சப்ரகமுவ மாகாண முதலமைச்சரும் கேகாலை மாவட்ட கபடி சங்கத்தின் தலைவருமான மஹிபால ஹேரத், பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, பரிசில்கள் வழங்கிக் கௌரவித்தார்.  

எதிர்வரும் காலங்களில், கபடி வீரர்களுக்கு, விசேட பயிற்சிகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக, அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு, கேகாலை மாவட்ட கபடி சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .