2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நீளம் பாய்தலில் முதலிடம் பெற்றார் கே. தர்மிகா

Editorial   / 2019 மே 28 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கே. கண்ணன் 

யாழ்ப்பாண மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான பெண்களுக்கான நீளம் பாய்தலில், உடுவில் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த கே. தர்மிகா முதலிடம் பெற்றார்.

யாழ். மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டி, யாழ். துரையப்பா விளையாட்டு மைதானத்தில் அண்மையில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்ற நிலையில் அண்மையில் இடம்பெற்ற குறித்த போட்டியில் 4.74 மீற்றர் தூரம் பாய்ந்து கே. தர்மிகா முதலிடம் பெற்றிருந்தார்.

இதேவேளை, இப்போட்டியில் 4.69 மீற்றர் தூரம் பாய்ந்திருந்த நல்லூர் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த பி. சகானா இரண்டாமிடம் பெற்றதோடு, 4.41 மீற்றர் தூரம் பாய்ந்த பருத்தித்துறை பிரதேச செயலகத்தைச் சேர்ந்த கே. நிரோசினி மூன்றாமிடத்தையும் பெற்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .