2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மைலோ கிண்ண அரையிறுதிகள் நாளை ஆரம்பிக்கின்றன

Editorial   / 2017 ஜூன் 16 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலைகளுக்கு இடையிலான விலகல் முறையிலான றக்பி தொடரான மைலோ ஜனாதிபதிக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிகள், கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில், நாளை (17) ஆரம்பிக்கின்றன.   

நாளை இடம்பெறவுள்ள முதலாவது அரையிறுதிப் போட்டியில், தர்மராஜா கல்லூரியை, சென். ஜோசப் கல்லூரி எதிர்கொள்கிறது. முக்கியமான வீரர்களுக்கு ஏற்பட்ட உபாதைகள் காரணமாக, கொழும்பு றோயல் கல்லூரி, இந்தத் தொடரிலிருந்து விலகியிருந்தது. இதனால், தர்மராஜ கல்லூரி, அரையிறுதிப் போட்டிகளுக்கு, நேரடியாகத் தகுதிபெற்றதோடு, சென். ஜோசப் கல்லூரி,  தனது காலிறுதிப் போட்டியில், வெஸ்லி கல்லூரியை வென்று, அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்திருந்தது.   

நாளை மறுதினம் (18) இடம்பெறவுள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இசிப்பத்தன கல்லூரியை, சென். பீற்றர்ஸ் கல்லூரி எதிர்கொள்ளவுள்ளது. இசிப்பத்தன கல்லூரி, தமது காலிறுதிப் போட்டியில், சென். அந்தனீஸ் கல்லூரியை வென்றும், சென். பீற்றர்ஸ் கல்லூரி, தமது காலிறுதிப் போட்டியில், திரித்துவ கல்லூரியை வென்றும், அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்திருந்தன.   

இந்தத் தொடர், பாடசாலைகள் றக்பி தொடருக்கு, மைலோ நிறுவனம், 25ஆவது ஆண்டாகவும் அனுசரணை வழங்கும் தொடராக அமைந்துள்ளது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .