2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

34 விரல்களுடன் பிறந்த குழந்தை

Kogilavani   / 2011 ஜூலை 26 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவில் குழறந்தையொன்று 34 விரல்களுடன் பிறந்ததன் மூலம் புதிய கின்னஸ் சாதனையை நிலை நாட்டியுள்ளது.

இந்தியாவின் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அக்ஸாட் சக்ஸேனா என்ற இந்த ஆண் குழந்தைக்கு இப்போது ஒரு வயதாகிறது.

குறித்த குழந்தையின் இரு கைகளிலும் தலா 7 விரல்கள்  காணப்படுகின்றன. இரு கால்களிலும் தலா 10 விரல்கள் உள்ளன.  மொத்தமாக 34 விரல்கள் காணப்படுவதாக கின்ன உலக சாதனை நூல் வெளியீட்டு நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த குழந்தை கடந்த வருடம் பெருவிரல்கள் இல்லாமல் பிறந்துள்ளது. இந்நிலையில் மேலதிக விரல்களை அகற்றுவதுன்  மூலம் பெருவிரல்களை உருவாக்கும் முயற்சியில் வைத்தியர்கள் ஈடுபட்டனர்.

குறித்த குழந்தையின் தாயான அம்ரிடா சக்ஸேனா இது குறித்துத் தெரிவிக்கையில், 'இந்த குழந்தை எங்களது முதற் குழந்தை. ஆதனால் நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தோம்.

ஆனால் அவனது விரல்களை பார்த்தவுடன் நான் மிகவும் அதர்ச்சியடைந்தேன்' என்று கூறியுள்ளார்.

மரபணு கோளாறு காரணமாகவே இவ்வாறு விரல்கள் அதிகரித்துக் காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் 31 விரல்களுடன் பிறந்த குழந்தையொன்று சாதனைப் படைத்தமை  குறித்து இணையத்தளத்தில் பார்வையிட்டதாக அம்ரிடா சக்ஸேனா தெரிவித்துள்ளார்.

'அதன்பின் எனது கணவரும் எனது தங்கையும் இணைந்து இணையத்தளத்தில் எமது குழந்தையின் விபரங்களை பதிவு செய்தனர்' எனவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0

  • J. Romani Monday, 05 September 2011 08:32 PM

    Lucky girl.

    Reply : 0       0

    flower Friday, 02 December 2011 08:34 PM

    அனைத்தும் அவன் செயல்...

    Reply : 0       0

    aboo Tuesday, 13 December 2011 02:57 PM

    எல்லாம் இறைவன் செயல்

    Reply : 0       0

    faisal Monday, 05 November 2012 05:28 PM

    அனைத்தும் இறைவன் செயல்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .