Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
Editorial / 2017 ஜூன் 27 , மு.ப. 01:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவுக்கு, படகுகள் மூலம் சட்டவிரோதமாகச் சென்றிருந்த அகதிகள் 20 பேர், இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்று, அவுஸ்திரேலியாவிலிருந்து வெளிவரும் தி அவுஸ்திரேலியன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அவர்கள் 20 பேரும், கிறிஸ்மஸ் தீவிலிருந்து, அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் எல்லைக் காவல் திணைக்களத்தினால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட விமானம் ஒன்றின் மூலமாகவே, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனர் என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவுஸ்திரேலிய கடல் எல்லை காவல் படையினரால், அகதிகள் படகொன்று, கடந்த வாரத்தில் இடைமறிக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அந்த 20 பேருடன், பாதுகாவலர்கள் மற்றும் மொழி பெயர்ப்பாளர்களும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலிய கடற்படையின், இரண்டு படகுகளுக்கு இடையில், சிறிய படகு ஒன்று நிறுத்தப்பட்டிருந்ததை கிறிஸ்மஸ் தீவு மக்கள், கடந்த வியாழக்கிழமையன்று கண்டிருந்தனர். இதனால், இலங்கையில் இருந்து அகதிகள் படகு வந்திருக்கலாம் என்ற சந்தேகம், அன்று வலுப்பெற்றிருந்தது.
எனினும், புதிய படகு ஏதேனும் இடைமறிக்கப்பட்டதா என்பதை, அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பீற்றர் டுற்றனின் பேச்சாளர் உறுதிப்படுத்த மறுத்து விட்டார் என்றும் அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைசியாக கடந்த மார்ச் மாதம், அகதிகள் படகு ஒன்றை அவுஸ்திரேலியா இடைமறித்திருந்தது. அதில் வந்த 25 அகதிகள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர் என்று அவுஸ்திரேலியா அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago