2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

5,040 கிலோகிராம் கழிவுத்தேயிலை சிக்கியது

Editorial   / 2017 செப்டெம்பர் 23 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


மாவத்தகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 8ஆவது மைற்கல் பிரதேசத்தில் வைத்து 5,040 கிலோகிராம் கழிவுத்தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளது.

மாவத்தகம பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே, இந்த கழிவுத்தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளது.

லொறியொன்றில், கழிவுத்தேயிலை கொண்டு செல்லப்படுவதாக, கிடைத்த தகவலையடுத்து, நேற்றிரவு 11:20 மணிக்கு, 8ஆவது மைற்கல் பிரதேசத்தில் வைத்து அந்த லொறியை மறித்து சோதனைக்கு உட்படுத்திய போதே, கழிவுத்தேயிலை கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரான லொறியின் சாரதி, நாவலப்பிட்டியைச் ரேச்ந்த 27 வயதானவர் என்றும், அவரை, பீலெஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில், இன்றையதினம் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .