2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

அடையாள அட்டைகள் வழங்க விசேட நாள்

Editorial   / 2017 நவம்பர் 22 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இவ்வருடம் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அடையாள அட்டைகளை வழங்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 25ஆம் திகதி காலை 8 மணி தொடக்கம் மாலை 4.30 மணிவரை பத்தரமுல்லையில் அமைந்துள்ள சுஹுருபாயவில் இந்த சேவையினைப் பெற்றுக்கொள்ளலாம் என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
 

அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை அனுப்பிய பாடசாலை விண்ணப்பத்தாரிகளுக்கான  அடையாள அட்டை தபால் மூலம் அனுப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதுவரை அடையாள அட்டைகளுக்கான விண்ணப்பங்களை அனுப்பாதவர்கள், விண்ணப்பித்தும் அடையாள அட்டை கிடைக்காதவர்கள் மற்றும் முகவரி மாற்றம் செய்ய வேண்டியவர்கள்  இந்த ஒருநாள் சேவையின் மூலம்  அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும், இதற்கான கட்டணமாக 1000 ரூபாய் அறவிடப்படும் என்றும்  ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .