2024 மே 08, புதன்கிழமை

‘அதே சீட்டு குட்டத்​தை குழுக்கினர்’

Editorial   / 2018 பெப்ரவரி 26 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சரவை மாற்றத்தில் எந்தவொரு மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷ, வேறு சீட்டுக் குட்டம் இன்மையால், அதே சீட்டு குட்டத்தை குழுக்கி, குழுக்கி அங்கொன்றும், இங்கொன்றுமாய் மாற்றியுள்ளனர். அதில் எவ்விதமான பிர​யோசனமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். 

பேராதனை, கெட்டபே ராஜோபவனாராம விஹாராதிபதி செப்பெட்டியா கொட சிறிவிமல ​தேரரிடம் ஆசிர்வாதம் பெற்றுகொண்டதன் பின்னர், அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்துரைத்த போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.  

“நாட்டை பற்றிச் சிந்திக்கின்ற தலைவர், நாட்டில் இன்றில்லை. நாடே, பாதுகாப்பின்றி உள்ளது.

தன்னுடைய பணிகளைச் செய்வதற்கு ஏனையவர்கள் ஜனாதிபதிக்கு இடமளிப்பதில்லை.

சேவை செய்யக்கூடிய மனிதர்களை இல்லாமற் செய்துவிடுமாறு ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குகின்றனர்.

இதனால், நாடு, இறுதி அரைவாசியில் தற்போது நின்றுகொண்டிருக்கின்றது என்றார்.  

“அமைச்சரவை மாற்றத்தில் எவ்விதமான அர்த்தமும் இல்லை. உள்ளூராட்சி மன்றங்கள் நிறுவப்பட்டாலும் அதிகாரத்​துடன் சுதந்திரமாக கடமையாற்றுவதற்கான சந்தர்ப்பம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.

அவ்வாறான செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி, தன்னுடைய கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துவாரென நான் நினைக்கின்றேன் ” என்றார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X