2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

அலுகோசு பதவிக்கான நேர்முகத் தேர்வுக்கு 79 பேர் தெரிவு

Editorial   / 2019 மார்ச் 20 , மு.ப. 10:13 - 1     - {{hitsCtrl.values.hits}}

அலுகோசு பதவிக்கு 102 விண்ணபங்கள் கிடைக்கப்பெற்றுள்ளனவென்றும் அவற்றில் 79 பேர் நேர்முகத் தேர்வுக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் என்றும், சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜெனரல் ஜெயசிறி விஜயநாத் தென்னகோன் தெரிவித்துள்ளார்.

நேர்முகத் தேர்வுகள், சிறைச்சாலை திணைக்களத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாத்தில் நடைபெறவுள்ளதென்றும் அவர் தெரிவித்தார்.

அலுகோசு பதவிக்கு விண்ணப்பித்த 102 பேரில் அமெரிக்க பிரஜையொருவர் உள்ளடங்கயிருந்தார் என்றும் எனினும் அந்தப் பதவிக்கு இலங்கை பிரஜைகளே இணைத்துக்கொள்ளப்படுவர் என்றும் தெரிவித்தார்.

அலுகோசு பதவிக்கு இருவரை தெரிவு செய்வதற்காக, விசேட நேர்முகத் தெரிவுக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என்றும், கல்வி, உடல் மற்றும் உள பரிசோதனைக்கு உட்படுத்தியதன் பின்னரே, அலுகோசு பதவிக்கு இருவர் தெரிவுசெய்யப்படுவர் என்றும் அவர் கூறினார்.

மேலும் அப்பதவிக்கு தெரிவு செய்யப்படுவோரின் குணாதிசயங்கள் மற்றும் குடும்பப் பின்னணி என்பவையும் கருத்திற்கொள்ளப்படுமென்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 1

  • Mohamed ifas Wednesday, 20 March 2019 07:34 AM

    Awesome

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .