2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அவுஸ்திரேலியாவும் பாராட்டு

Editorial   / 2018 டிசெம்பர் 17 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடி தீர்க்கப்பட்டுள்ளமையை ஏற்றுக்கொள்வதாக இலங்கையிலுள்ள அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்தியப் பெருங்கடலில் நீண்டகால நண்பர்கள் என்ற ரீதியில், இலங்கையின் அரசியல் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளமையை ஏற்றுக்கொள்கின்றோம். அது இலங்கையின் ஜனநாயக நிறுவனங்களின் உறுதிப்பாட்டை வெளிக்காட்டுகின்றது எனவும், அவ்வலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் அமைதி, நல்லிணக்கம் மற்றும் செழுமைக்காக இலங்கையுடனான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் இரு நாடுகளுக்கிடையில் உறவை பலப்படுத்தவும் எதிர்பார்ப்பதாகவும் இலங்கையிலுள்ள அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .