2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஆசிரியரை பழிதீர்த்த மாணவன்

Editorial   / 2018 ஜூன் 19 , பி.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆனமடு பகுதியில், பிரசித்திப் பெற்ற பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவரை மாணவன் ஒருவன் தாக்கிய சம்பவம் ஒன்று இன்று (19) பதிவாகியுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான ஆசிரியர், ஆனமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என, பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பாடசாலையில் தரம் 13 இல் தொழில்நுட்ப பாடம் நடத்திய ஆசிரியர், மாணவனின் வகுப்பறையில் நடந்துகொண்ட விதத்தை கண்டுத்துள்ளார். இதனையடுத்து வகுப்பை புறக்கணித்துவிட்டு வெளியில் வந்த மாணவன், சக மாணவர்களுடன் இணைந்து, ஆசிரியரை கீழே தள்ளி கடுமையாக தாக்கியுள்ளார்.

இந்நிலையில் மாணவனின் தாக்குதலுக்கு இலக்கான ஆசிரியரும், ஆசிரியரினால் தாக்கப்பட்ட மாணவனும் சிகிச்சைக்காக ஆனமடு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஆனமடு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .