2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் 19 வேட்பாளர்கள் கைது

Editorial   / 2018 ஜனவரி 15 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடைபெறயிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக இதுவரையும் 166 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் 19 வேட்பாளர்கள் உள்ளடங்குவதாகவும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இவர்கள் தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் தேர்தல் முறைபாடுகள் தொடர்பிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக 57 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், இவைத் தொடர்பில் 120பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 10 வேட்பாளர்கள் உள்ளடங்குகின்றனர்.

இவைத்தவிர தேர்தல் முறைபாடுகள் 129 பதிவாகியுள்ளதுடன், இவைத் தொடர்பில் 46பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 09 வேட்பாளர்கள் உள்ளடங்குவதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .