2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கட்டியணைத்த நிலையில் மனித எலும்புக்கூடுகள் மீட்பு

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2018 ஜூலை 19 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் மன்னார் விற்பனை நிலைய வளாகத்திலிருந்து சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடிய வகையிலான எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஒருவரையொருவர் கட்டியணைத்தவாறு இருப்பது போன்று அருகருகே குறித்த மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்பதுடன், பெண்கள் அணியும் காப்பு போன்றதொரு தடயப் பொருளும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் 'சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் கண்டுடெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இரு மனித எச்சங்கள் ஒன்றாகக் காணப்பட்டமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த வளாகத்தில் கடந்த 17ஆம், 18ஆம் ஆகிய இரண்டு நாள்களும் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதப் புதைக்குழி அகழ்வில் தற்போது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக மனித எலும்புகள் மீட்கப்பட்டு வருகின்றன.

மனித எச்சங்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து குறித்த வளாகத்தை விரிவுபடுத்தி அகழ்வு செய்யும் பணி இடம்பெற்று வருகின்றது.

மன்னார் சதொச விற்பனை நிலையக் கட்டுமானப் பணி, கடந்த மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கான மணல் அகழ்வின் போது கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்களைத் தொடர்ந்து இது சம்பந்தமாக சட்ட ரீதியான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு, இப்பகுதியில் அகழ்வுப் பணி இடம்பெற்று வருகின்றது.

இவ் அகழ்வுப் பணியானது, நேற்று புதன் கிழமை (18)  36 ஆவது நாட்களாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .