2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’கருணா அம்மான் பகல் கனவு காண்கிறார்’

Editorial   / 2020 ஜூலை 11 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்று கொலைகளை செய்த கருணா அம்மான் என்னை தோற்கடித்து, முஸ்லீம் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்ய தேர்தல் வியூகங்களை வகுத்துள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும் நாடாளுமன்ற வேட்பாளருமான எச்.எம்.எம். ஹரீஸ் குற்றஞ்சாட்டினார்.

அம்பாறை  திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிடும் ஹரீஸ்  இன்று(11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், தேர்தல் பிரசாரம் என்ற போர்வையில் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் என்கிற கருணா அம்மான்,  தமிழ் -  முஸ்லிம் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தும் வண்ணம் செயற்பட்டு வருகின்றார்.

அவரது பிரசாரத்தில் அண்மையில் முஸ்லிம்களை வந்தேறி குடிகள் என விழித்து கருத்துக்களை தெரிவித்திருந்தார்.ஆனால் கருணா தான் அம்பாறை மாவட்டத்தின் அரசியல் வந்தேறி. முஸ்லிம் மக்களின் அடையாளம் எமது அம்பாறை மாவட்டமாகும். 

எனவே பல்வேறு கொலைகளை செய்த இவர் போன்றவர்கள் தான் நேரடியான கொலைகளை செய்தது மாத்திரமன்றி   வரலாற்று கொலைகளை செய்து கொண்டிருக்கின்றார்கள். பல இடங்களில் முஸ்லிம்களை இவர் தலைமையிலான புலிகளே கடந்த காலங்களில் கொன்றிருந்தார்கள். காத்தான்குடி, கல்முனை, அக்கரைப்பற்று பொத்துவில் மூதூர் போன்ற பகுதிகளில் முஸ்லிம் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

கருணா அம்மானின் தேர்தல் வியூகம் என்பது கல்முனை தொகுதியில் என்னை தோற்கடித்து கல்முனை நகரத்தை கைப்பற்றலாம் என பகல் கனவு காண்கிறார். கருணா அம்மானை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும்.” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .