Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
Editorial / 2017 ஜூலை 24 , பி.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
காணாமல் போனவர்களுக்கான அலுவலகச் சட்டத்துக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பம் வைத்துள்ளதையடுத்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்துக்கேற்ப, கடந்த காலம் பற்றி நடவடிக்கைகளை எடுப்பதற்கே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக, மகாநாயக்க தேர்கள் உள்ளிட்ட பௌத்த சங்க சபையினருக்கு அனுப்பியுள்ள கடித்திலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது,
“2017 இலக்கம் 9 என்ற காணாமல் போனோர் தொடர்பான செயலகம் (திருத்தம்) சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்படும் நிறுவனம் ‘செயலகம்’ என அழைக்கப்பட்டாலும், அது நீதிமன்றத்துக்கு இணையானது.
“காணாமல் போனவர்கள் தொடர்பான செயலகம் சட்டத்தின் 12ஆவது பந்திக்கு அமைய, செயலகம், முறைப்பாடுகளை ஏற்று விசாரணைகளை நடத்தும். சாட்சியாளர்களிடம் வாக்குமூலங்களைப் பெறும்.
“இதனையடுத்து குற்றஞ்சுமத்தப்படும் நபர்களை அழைத்து உத்தரவுகளைப் பிறப்பிக்கவும் விசாரணைகளை நடத்தவும், நீதிமன்றத்துக்கு இணையான அதிகாரங்கள் இந்தச் செயலகத்துக்கு உள்ளது.
“காணாமல் போனவர்கள் தொடர்பான செயலகம், சட்டமூலத்தை அமுல்படுத்தும் வகையில் ஜனாதிபதி, அண்மையில் அதில் கையெழுத்திட்டதுடன், அது நல்லிணக்கத்துக்காக எடுக்கப்பட்ட முன்னோக்கிய நடவடிக்கை ஆகும்.
“கடந்த 2016ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டமூலத்தை, ஒன்றிைணந்த எதிரணி எதிர்த்தது.
“இந்த எதிர்ப்பையும் மீறி, ஐக்கிய தேசியக் கட்சி, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர், மக்கள் விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் இணைந்து, பலவந்தமாக சட்டமூலத்தை நிறைவேற்றின.
“மேலும் சட்டத்தின் 12ஆவது பந்திக்கு அமைய, செயலகத்தின் அதிகாரிகள் இரவு, பகல் என எந்த நேரமாக இருந்தாலும், பொலிஸ் நிலையங்கள், படை முகாம்கள் அல்லது சிறைச்சாலைக்குள் சென்று அவர்களுக்கு தேவையான ஆவணங்கள், தேவையானவற்றை எடுத்துக்கொள்ளும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
“21ஆம் பந்திக்கு அமைய, உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த எந்த தரப்பிடம் இருந்தும், நிதி ஆதாரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
“இதனடிப்படையில், குறித்த செயலகத்திற்கு வெளிநாடு அரசாங்கங்கள், சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் அல்லது தடை செய்யப்படாத புலம்பெயர் புலிகள் அமைப்பின் நிறுனங்களிடம் இருந்து, நிதியைப் பெற முடியும்” என்று முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
2 hours ago
7 hours ago