2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

குவைட்டிலிருந்து 26 இலங்கைப் பணிப்பெண்கள் நாட்டை வந்தடைந்தனர்

Editorial   / 2019 ஏப்ரல் 17 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

டீ.கே.ஜி கபில

குவைட்டில் பணிபுரிந்த நிலையில், அங்கு பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்த 26 இலங்கைப் பணிப்பெண்கள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

குறித்த பணிப்பெண்கள் பணிபுரிந்த வீட்டு எஜமானர்களால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளதுடன் இவர்களுக்கு உரிய முறையில் கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என்றும், இவ்வாறு பல பிரச்சினைகளுக்கு உள்ளான பெண்களே  குவைட்டில் உள்ள இலங்கைத் தூதுவராலயத்தில் சரணடைந்த நிலையில், அங்கு சுரக்ஸா மத்திய நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு, இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 6.30 மணியளவில் ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் யூ. எல். 230 விமானம் மூலம் இவர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

குறித்தப் பெண்களில் இருவர் மாத்திரம் 2 வருடங்கள் அங்கு பணிபுரிந்துள்ளதுடன், ஏனைய 24 பேரும் ஒரு வருடத்துக்குக் குறைவாகவே குவைட்டில் பணிப்புரிந்துள்ளதாகத் தெரியவருகிறது.

இவர்கள் அனைவரும் நாட்டின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், இவர்கள் தமது சொந்த இடங்களுக்குச் செல்வதற்கான பஸ் கட்டணங்களுக்கான கொடுப்பனவுகள் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் ஊடாக வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .