2024 மே 08, புதன்கிழமை

சவுக்கடி இரட்டைக் கொலையை கண்டித்து போராட்டம்

Editorial   / 2017 ஒக்டோபர் 20 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா,பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சவுக்கடி பகுதியில் தாயும்,மகனும் அடித்துக் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தினை கண்டித்தும் உயிரிழந்த மாணவனுக்கு நீதிவேண்டியும் கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (20) காலை முன்னெடுக்கப்பட்டது.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சவுக்கடி,குடியிருப்பு முருகன் கோவில் வீதியில் உள்ள வீடு ஒன்றில் 27வயதுடைய தாயும் அவரது 11வயதுடைய மகனும் அடித்துக்கொலைசெய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர்.

ஏறாவூர் பற்று பிரதேசத்துக்குட்பட்ட ஆறுமுகத்தான்குடியிருப்பு கலைமகள் மகா வித்தியாலயத்தில் தரம் 06 பயிலும் பீ.மதுசன் அவரது தாயான 26வயதுடைய மதுசாந்தி பீதாம்பரம் ஆகியோர் படுகொலைசெய்யப்பட்டிருந்தனர்.

இவர்களின் படுகொலை தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் மற்றும் விசேட பொலிஸ் குழுக்களும் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படுகொலையினைக் கண்டித்து கொலையாளிகளை விரைவில் கைதுசெய்து சட்டத்தின் முன்பாக நிறுத்தக்கோரியும் ஆறுமுகத்தான்குடியிருப்பு கலைமகள் மகா வித்தியாலய மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள்,பெற்றோர்,பாடசாலை சமூகம்,கிராம அபிவிருத்தி சங்கங்கள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தினை நடத்தினர்.

பாடசாலை முன்றலில் ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டகாரர்கள் பிரதான வீதியூடாக சென்று வாசிகசாலை முன்றலில் தமது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏற்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X