2024 மே 08, புதன்கிழமை

தப்பிச் சென்ற சந்தேக நபர்கள் தொடர்பில் தீவிர விசாரணை

Editorial   / 2017 ஒக்டோபர் 18 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டாரகம பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாடுகளை வேன் ஒன்றில் கடத்திசென்ற குழுவினரை பொலிஸார் மடக்கிப்பிடிக்க முயன்ற போது அவர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதையடுத்து பொலிஸாரும் பதிலுக்கு துப்பாக்கிப் பிரயோகம்  மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்றைய தினம் (18) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு பொலிஸார் சந்தேக நபர்களை  நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதையடுத்து, சந்தேக நபர்கள் வேன் மற்றும் துப்பாக்கி என்பற்றை கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

தப்பிச் சென்ற சந்தேக நபர்கள் கைவிட்டுச் சென்ற ரீ56 ரக துப்பாக்கி மற்றும் கத்தி, என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளதுடன்,சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பண்டாரகம பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X