2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு அறிவுறுத்தல்

Editorial   / 2019 ஜூலை 19 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரமுகர் பாதுகாப்பு உத்தியோகத்தர் குழுவினரால் வேன் ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவுத்தலை கொழும்பு குற்றப் பிரிவுக்கு பதில் பொலிஸ் மா அதிபர் வழங்கியுள்ளார். 

கொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் வேன் ஒன்று தாக்கப்பட்டதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

முக்கிய பிரமுகர் ஒருவர் பயணித்த கெப் வண்டி மற்றும் அதனுடன் பயணித்த டிபெண்டர் வண்டியில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் குறித்த வேன் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமது வாகனங்களுக்கு முந்திச் செல்வதற்கு இடமளிக்காததன் காரணமாகவே தான் தாக்கப்பட்டதாக அந்த வேனின் சாரதி, முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .