2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’தாய்நாடு குருதியில் நனைந்தது போதும்’

Editorial   / 2019 மே 18 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய் நாடு, குருதியில் நனைந்தது போதும் என, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

பம்பலப்பிட்டி புனித மரியாள் தேவாலயத்தில், நேற்று (17) மாலை நடைபெற்ற விசேட ஆராதனையில் பங்கேற்று உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் உரையாற்றிய அவர்,

உலகில் உண்மையில் கடவுள் இருந்தால், ஏன் இப்படியான சம்பவங்கள் நடக்கின்றன; ஏன் அதற்கு இடமளிக்கின்றார் என்று சிலர் நினைக்கலாம் என்று கூறிய  அவர், மனிதனின் சுயநலம் காரணமாக, இப்படியான சம்பவங்கள் நடக்ப்பதாகவும் இவை கடவுளாள் திட்டமிடப்பட்டவை அல்ல என்றும் கூறினார்.

கொலை செய்வதும் மற்றவரின் உயிரை பறிப்பது கடவுளின் சட்டத்தில் இல்லை என்றும் தமது உயிர்களை கூட கவனத்தில் கொள்ளாவது, இந்த முட்டாள் மனிதர்கள் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து, கவலையடைவதாகவும் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .