2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

திகன விமான நிலைய நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க குழு நியமனம்

Editorial   / 2018 செப்டெம்பர் 25 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, இடைநிறுத்தப்பட்டுள்ள திகன உள்நாட்டு விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய்வதற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் ஸ்ரீபாலடி சில்வாவால் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

கடந்த கால ஆட்சியின் போது, இந்த விமான நிலைய திட்டத்துக்காக 197 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டு இதன் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போது, சுற்றாடல் பாதுகாப்பு அமைப்புகள் பல முன்னெடுத்த எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக, இதன் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.

எனவே இடைநிறுத்தப்பட்டுள்ள குறித்த திட்டத்தின் குறைபாடுகளை கண்டறிந்து, மீண்டும் இந்தத் திட்டத்தை ஆரம்பிப்பதற்காகவே அமைச்சரால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .