Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
Yuganthini / 2017 ஜூலை 27 , பி.ப. 02:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிரியுல்ல, அதுருவெல பகுதியில் இடம்பெற்ற திருமண விருந்துபசார நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக சென்ற 3பேர், கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று (26) இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
திருமண விருந்துபசார நிகழ்வை நடத்தியவர்கள் அம்மண்டபத்தில் காணப்பட்ட கிணற்றை பலகைகள் கொண்டு மூடியுள்ளனர்.
இதை அறியாத ஒருவர் பலகை மீதேறியப்போது, பலகை உடைந்து கிணற்றினுள்ளே வீழ்ந்துள்ளார். இதன்போது அவரைக் கயிறு கொண்டு காப்பாற்றுவதற்காகச் சென்ற இருவரும் கிணற்றுக்குள் அகப்பட்டு விட்டனர்.
பின்னர்,இம்மூவரையும் மீட்டு, தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதித்தப் போது, மூவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago