2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தூபி மீது ஏறி புகைப்படங்களை எடுத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை

Editorial   / 2019 ஜனவரி 22 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்று தொன்மை மிக்க, அனுராதபுரத்தில் அமைந்துள்ள கிரலாகல தூபி மீது ஏறி நின்று புகைப்படம் எடுத்து, அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவிறக்கம் செய்த சில இளைஞர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த புகைப்படங்கள் பேஸ்புக் வலைத்தளத்தில் பதிவிறக்கப்பட்டுள்ளதோடு, இவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் வரலாற்று சிறப்புமிக்கதும் சமய ஸ்தலமாகவும் கருதப்படும் குறித்த தூபியை அவமதிப்புக்குள்ளாக்கியுள்ள இந்த மாணவர்கள் மீது, சமூக வலைத்தளங்களில் பாரியளவில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டும் விமர்சனங்களுக்குள்ளாக்கப்பட்டும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .