2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நாவுலயில் முதல் கொரோனா தொற்றாளர்

Kogilavani   / 2020 ஒக்டோபர் 25 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திக அருணகுமார

மாத்தளை நாவுல நகரில், முதல் கொரோனா தொற்றாளர், நேற்று (24) அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நாவுல நகருக்கு அருகில் மீன் விற்பனை நிலையமொன்றை நடத்திச் சென்ற நபருக்கே, கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 

மேற்படி மீன் விற்பனை நிலையத்திலுள்ளவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொண்ட போதே, குறித்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிபடுத்தப்பட்டது.
இந்நிலையில் அவரது குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவருடன் தொடர்பைப் பேணியவர்களைக் கண்டறிவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் அப்பகுதிக்குப் பொறுப்பான பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

நாவுல பிரதேச செயலகம், பொலிஸார், பொதுசுகாதார பரிசோதகர்கள் இணைந்து, நாவுல பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதியில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான விசேட நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .